வேட்டையன் படத்துக்குப் பிறகு ‘தோசா கிங்’… இந்திக்கு செல்லும் இயக்குனர் ஞானவேல்!

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (14:31 IST)
தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் சரவண பவன் ராஜகோபாலுக்கு எதிராக வழக்கு நடத்திப் போராடிய ஜீவஜோதியின் வாழ்க்கையை ‘தோசா கிங்’ என்ற பெயரில் இயக்குனர் ஞானவே இந்தியில் படமாக எடுக்கவுள்ளாராம். ஜீவஜோதி வழக்கு நடந்தபோது பத்திரிக்கையாளராக அந்த வழக்கை நேரில் பார்த்தவர் ஞானவேல் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்