மீண்டும் சினிமாவில் இணையும் சூர்யா- ஜோதிகா

செவ்வாய், 1 மார்ச் 2022 (23:26 IST)
தமிழ் சினிமாவில்  நட்சத்திர  ஜோடி சூர்யா- ஜோதிகா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம்  ‘’எதற்கும் துணிந்தவன்.’’

இப்படத்திற்கு  மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் பாலா இயக்கத்தில் 2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா- ஜோதிகாவின்   ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்