ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

vinoth

வியாழன், 8 மே 2025 (06:57 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம் அதன் பின்னர் வசூலில் அடிவாங்கியது.

இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் இந்த படம் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் ‘ரெட்ரோ’ படம் ஒரு சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் மூலமாகக் கிடைத்த லாபத்தில் 10 கோடி ரூபாயைத் தன்னுடைய அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்