விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்துக்கான திரைக்கதையை செப்பனிடும் பணியை வெற்றிமாறன் தன்னுடையக் குழுவினரோடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சூர்யா தற்போது வெங்கட் அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே வாடிவாசல் தற்போது தற்காலிகமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதற்குக் காரணம் சூர்யாதான் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா தற்போது குறுகியக் கால படங்களில் அதிகமாக நடிக்க தொடங்கியுள்ளார். அதனால் வாடிவாசல் படத்தில் நடித்தால் அதிக நாட்கள் அந்த படத்துக்குத் தேதிகள் கொடுக்கவேண்டும் என்பதால் தற்போதைக்கு இந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.