பாலா படத்தில் படகோட்டியாக சூர்யா… வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:33 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படகோட்டி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் நாச்சியார். அதன் பிறகு அவர் இயக்கிய வர்மா திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த படத்தை நடித்து தயாரிக்க உள்ளார் சூர்யா. இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பல முன்னணிக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது அவர் படகோட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்