”முதல்முறையாக வந்திருக்கிறேன்”…. சூர்யா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:10 IST)
நடிகர் சூர்யா தற்போது தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கவனத்தைப் பெற்ற ஒன்றாக அமைந்தது. அதையடுத்து அவர் இப்போது இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு மதுரை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு ‘முதல் முறை’ என்றும் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்