அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைதன் பெற்றது. தமிழ்நாட்டைத் தவிர இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை.
உலகளவில் இந்த படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து மே 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிவருகிறது. இதையடுத்து நெட்பிளிக்ஸின் முதல் 10 ஆங்கிலப் படங்கள் அல்லாத படங்களின் டிரண்டிங்கில் இணைந்துள்ளது. அதே போல படம் வெளியான போது வரவேற்புக் கிடைக்காத தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மாநிலங்களிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படம் பற்றி ஒரு முக்கியமானத் தகவலை சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார். அதன்படி குட் பேட் அக்லி படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்குவதாக ஒப்பந்தம் செய்த சன் தொலைக்காட்சி இப்போது அதை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் ஓடிடிகளின் வருகையால் தொலைக்காட்சிகளில் விளம்பரக் குறுக்கீடுகளுக்கு நடுவே படத்தைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை எனபதால் பெரிய நடிகர்களின் படங்களுக்கே TRP குறைந்து வருகிறதாம். இதன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவுதான் இது என்று சொல்லப்படுகிறது.