கமல், அஜித் வரிசையில் பெண் தன்மைக் கொண்ட கதாபாத்திரத்தில் சிம்பு.. ‘சிம்பு 50’ அப்டேட்!

vinoth

வெள்ளி, 23 மே 2025 (09:48 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சிம்பு பகிர்ந்துள்ளார். அதில் “சிம்பு 50 படத்தின் படைப்பு சுதந்திரத்திற்காக அதை நானே தயாரிக்கிறேன். அதில் பெண் தன்மைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அது சம்மந்தமாக நான் கமல் சாரிடம் சமீபத்தில் பேசினேன்.” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மற்றும் அஜித் போன்றவர்கள் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்