தயாரிப்பாளராகக் களமிறங்கும் சுதா கொங்கரா.. சிவகார்த்திகேயன் 25 அப்டேட்!

vinoth

செவ்வாய், 30 ஜூலை 2024 (07:47 IST)
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை KVN புரொடக்‌ஷன் நிறுவனத்தோடு இணைந்து சுதா கொங்கராவே தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சுதா கொங்கரா முதல் முறையாக தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். இதற்காக அவர் மீனாட்சி சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்