அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் மற்றும் லப்பர் பந்து புகழ் ஸ்வாஸிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்க, நேற்று இந்த படம் ரிலீஸானது.
அக்கா, தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட பாசமலர் டைப் கதையாக உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.