கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

vinoth

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (14:42 IST)
தமிழ் சினிமா ஆக்‌ஷன் படப் பிரியர்களுக்கு திகட்ட திகட்ட விருந்து வைத்தவர் விஜயகாந்த். 80 களிலும் 90 களிலும் வெளியான அவரின் ஆக்‌ஷன் படங்கள் இன்றளவும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன.

அப்படி விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்தான் அவரின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அதுவரையிலான அவரின் வெற்றிகளை எல்லாம் தகர்த்தெறிந்து புதிய பென்ச்மார்க்கை உருவாக்கியது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படம் டிஜிட்டலில் புதுப்பொலிவாக்கப்பட்டு இன்று ரி ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் திரையரங்கில் பார்த்தனர். அப்போது விஜயகாந்தை திரையில் பார்த்ததும் அவரது மனைவி பிரேமலதா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்