தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அதையடுத்து இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா ஆகியோரை வைத்து இயக்கிய சிக்கந்தர் படம் படுதோல்வி படமாக அமைந்தது.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு பாடல் காட்சியை மீண்டும் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளில் மேலும் சில ஷாட்கள் தேவைப்படுவதால் அதையும் திரும்ப ஷூட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.