செந்தில்-ராஜலட்சுமி கூறியது பொய்: நாட்டுப்புற பாடகியின் திடீர் குற்றச்சாட்டு!

வியாழன், 11 பிப்ரவரி 2021 (07:43 IST)
செந்தில்-ராஜலட்சுமி கூறியது பொய்: நாட்டுப்புற பாடகியின் திடீர் குற்றச்சாட்டு!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் பொய் கூறியுள்ளனர் என்றும் தன்னுடைய பாடலை திருடி கோவில் விழாக்களை பாடி வருகின்றனர் என்றும் நாட்டுப்புற பாடகி மதுரமல்லி என்பவர் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நாட்டுப்புற பாடகி மதுரமல்லி என்பவரால் இயற்றி பாடப்பட்ட பாடல் ஒன்று யூடியூபில் இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இந்த பாடலை செந்தில் ராஜலட்சுமி திருடி கோவில் விழாக்களில் பாடி வருவதாகவும், இந்த பாடலை தங்களது தோழி இயற்றியதாக பொய் கூறியுள்ளதாகவும் பாடகி மதுரமல்லி புகார் கூறியுள்ளார்
 
மேலும் தான் பாடல் இயற்றியதற்கு ஆதாரமாக யூட்யூபில் இன்றளவும் அந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து வருவதாக கூறிய மதுரமல்லி, செந்தில் மற்றும் ராஜலட்சுமி தங்களுடைய தோழிதான் அந்த பாடலை இயற்றியது என்ற கருத்தை வாபஸ் பெறவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் என்ன பதில் கூறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்