முதல் முதலாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் சிம்புவின் படம்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:47 IST)
சிம்புவின் மாநாடு படம் இன்னும் சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த படமாக மாநாடு அமைந்துள்ளது.

வெளியாகி 3 வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள மாநாடு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 58 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் சேர்த்து சுமார் 97.5 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஓரிரு நாளில் 100 கோடி க்ளப்பில் இணைய உள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் சிம்புவின் படமாக மாநாடு அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்