இந்த படத்துக்கான ஒரு ப்ரமோஷன் காட்சியை சமீபத்தில் வெற்றிமாறன் படமாக்கினார். ஆனால் இதுவரை அந்த ப்ரோமோ வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதே போல இந்த படத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் தாணு விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சிம்பு அதிக சம்பளம் கேட்பதாலும் படத்தின் பட்ஜெட் எகிறியதாலும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தைத் தயாரிக்க சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் சிம்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.