இந்தப் படம் ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்திருந்தார். கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனை வளையத்தில் சிக்கியதால் இந்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போதைக்கு இந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சிம்பு வெற்றிமாறன் படம்தான் அவரின் 49 ஆவது படமாக வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.