ஷங்கரின் அடுத்த படம் ‘வேள்பாரி’.. 3 பாகங்களில் உருவாகிறதா? ஹீரோ யார்?

Mahendran
வியாழன், 11 ஜூலை 2024 (14:03 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே இயக்கி வரும் கேம் சென்டர் என்ற படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 
 
இந்த நிலையில் ஷங்கரின் அடுத்த படம் வேள்பாரி என்பது தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை எம்பி சு வெங்கடேசன் என்பவர் எழுதிய நாவலான வேள்பாரியை சமீபத்தில் படித்ததாகவும் அதன் பின்னர் திரைக்கதையும் எழுதி முடித்து விட்டதாகவும் ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே வேள்பாரி நாவலை திரைப்படம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக நடிகர் சூர்யா கூறிய நிலையில் தற்போது ஷங்கரும் அதையே கூறியுள்ளதால் இந்த படத்திற்காக ஷங்கர் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவல் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மட்டுமின்றி கடந்த 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்