அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தை முடிந்து சந்தானம் இந்த படத்தில் நடித்தால் 11 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் சந்தானம் ஆகிய இருவரையும் நாம் திரையில் மீண்டும் சேர்ந்து பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டு இருவரும் லிங்கா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.