வேதனையில் இருந்து நான் இன்னும் மீளவில்லை… சமந்தா சோகம்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:14 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படம் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அது தவிர, சில தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துள்ள உணர்ச்சி பூர்வமான தகவல் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. அதில் “ என்னை எல்லோரும் சுதந்திரமான எண்ணம் கொண்ட வலிமையான பெண்ணாக நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படி வலிமையானவள் இல்லை. வாழ்க்கையில் நானும் கண்ணீர் வேதனைகளைப் பார்த்துள்ளேன். அதில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை” என உணர்ச்சி பூர்வமாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்