தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா… அறிவிப்பை வெளியிட்ட எஸ் ஆர் பிரபு!

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:20 IST)
எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் சமந்தா இரு மொழிகளில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மேல் அவதூறுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் எதிர்மறையான சூழலில் இருந்து விலகும் விதமாக சமந்தா படங்களில் மறுபடியும் அதிகளவில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இப்போது அவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் அறிவிப்பை எஸ் ஆர் பிரபு தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்