தெலுங்கை குறி வைக்கும் எஸ் 3

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (15:05 IST)
சிங்கம் படத்தின் 3 -வது பாகமான எஸ் 3 -இன் படப்பிடிப்பு இந்த கடும் வெயிலிலும் நெல்லூரில் நடந்து வருகிறது. வரும் 27 -ஆம் தேதிவரை அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.


 
 
எஸ் 3 -இன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. நெல்லூர் படப்பிடிப்பு முடிந்த பின் மே இறுதியில் மீண்டும் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். அதன் பிறகு மலேசியா செல்கின்றனர்.
 
எஸ் 3 யின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாவட்டங்களில் நடக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைத்தே, படத்தின் களத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வரும்படி ஹரி அமைத்துள்ளார் என்கிறார்கள்.
 
தெலுங்கை நம்பி தமிழை கைவிடாதீங்கப்பா.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்