இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக செய்தி! அவரே பகிர்ந்து கேலி!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:03 IST)
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியான நிலையில் அதை அவரே பகிர்ந்து கேலி செய்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக  கமல் ஆர் கான் என்ற விமர்சகரின் பக்கத்தில் செய்தி வெளியானது.

இதைப் பார்த்த அனுராக் காஷ்யப் தானே அதைப் பகிர்ந்து ‘எமதர்ம ராஜனை நேற்று சந்தித்தேன். என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டு இன்னும் நீ பல திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என சொல்லி சென்றார்’ என நக்கலாக பதில் சொல்லியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்