5 மொழிகளில் வெளியாகும் ராஷ்மிகாவின் புதிய பட டீசர்..!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:23 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இப்போது அவர்  தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய ராகுல் ரவீந்தரன் “இந்த படத்தின் கதை 10 வருடங்களுக்கு முன்பே என் மனதில் உதித்தது. இதை 2020 ஆம் ஆண்டு எழுதி முடித்தேன். இந்த படத்தின் டீசர் விரைவில் ஐந்து மொழிகளில் வெளியாகும். இந்த படத்துக்காக ராஷ்மிகா முதல் முதலாக ஐந்து மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்