இந்நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஓல்ட் உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் மார்ச் 10 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஷூட்டிங்கில் முதல் கட்டமாக 15 நாட்கள் மட்டும் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளாராம். அதன் பின்னர் அவர் மூன்று மாதங்கள் ஓய்வெடுத்துக் கொள்ள உள்ளாராம். அந்த காலத்தில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும் வேலையிலும் ஈடுபட உள்ளாராம்.