ரஜினி பட இயக்குநர் இலங்கை தமிழர்களுக்கு உதவி !

ஞாயிறு, 27 ஜூன் 2021 (08:54 IST)
இலங்கைத் தமிழர்களுக்கு  ரஜினி பட இயக்குநர் உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் ஜிகிர்தண்டா, பீஸா, ரஜினி நடிப்பில் பேட்ட, சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில்  கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,சார்பில் அவரது நண்பர்கள் இணைந்து  மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள  800 இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவராணப் பொருட்களை  வழங்கினர்.
இதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்