புஷ்பா பட நடிகரை கைது செய்த போலீஸார்… துணை நடிகை தற்கொலை விவகாரத்தில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (13:49 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தில் கேசவ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி என்பவர் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் துணை நடிகை ஒருவரோடு லிவ் இன் உறவில் இருந்துள்ளார். அவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை ஜெகதீஷ் கொடுமைப்படுத்தியதாக அந்த நடிகையின் தந்தை புகாரளித்துள்ளார்.

அதன் காரணமாக விசாரணையை மேற்கொண்ட போலீஸார் இப்போது புகாரில் உண்மை இருப்பதாக கண்டறிந்து இப்போது ஜெகதீஷைக் கைது செய்துள்ளனர். புஷ்பா 2 திரைப்படத்திலும் ஜெகதீஷ் நடித்து வரும் நிலையில் அவரின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்