திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

vinoth

சனி, 7 ஜூன் 2025 (12:51 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு  ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தது.. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ’ராஜாசாப்’ படத்துக்காக இணைந்தார் பிரபாஸ். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

ஹாரர் த்ரில்லர் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தள்ளிப் போய் இப்போது வரை புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை 100 கோடி ரூபாயாகக் குறைத்துக் கொண்டுள்ளாராம். அவர் 150 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு வருகிறார். ஆனால் இந்த படத்துக்காக திடீரென சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு படத்தின் லாபத்தில் பங்குப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்