''பொன்னியின் செல்வன்- 1 ''உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல்!

புதன், 12 அக்டோபர் 2022 (16:27 IST)
மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் -30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன்-1 படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் எனும் மைல்கல்லை எட்டியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன்- 1  படம் உலகம் முழுவதும் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரூ.400 கோடி வசூலீட்டியுள்ளதாக இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ALSO READ: பொன்னியின் செல்வன் பார்த்து ஜெயம் ரவியைப் பாராட்டிய ரஜினி! வைரல் ட்வீட்!

இது கமலின் விக்ரம் பட வசூல் சாதனையை விரைவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் ஆர்.ஆர்.ஆர். கேஜிஎஃப். விக்ரம் ஆகிய படங்களுக்கு அடுத்து, மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ள பொன்னியின் செல்வன்-1 படக்குழுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
 

#PS1

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்