ராஜ் குந்த்ரா வழக்கில் முன்னேற்றம்… 50 படங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (15:25 IST)
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாசப் படங்களை எடுத்து செயலியின் மூலம் பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி வருவதாக செய்திகள் வருகின்றன. அந்த வகையில் அவரிடம் இருந்த 50க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்