கிடுகு படத்திற்கு எதிராக போலீஸில் தி.க.,வினர் புகார் !

புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:12 IST)
கிடுகு என்ற படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் எங்களைப் புண்படுத்திவிட்டதாக திராவிட விடுதலை கழகத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

ராமலட்சுமி தயாரிப்பில் இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிடுகு. இப்படத்தின் துணைத்தலைப்பாக சங்கிகளின் கூட்டம் என்ற இடம்பெற்றிருந்தது.

இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில்,க் இடம்பெற்றுள்ள வசனங்களில்,  சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான், பின்பு மூட நம்பிக்கையை   ஒழிக்க தாலியை அறுப்பான்! இதுதான் திராவிட மாடல் என்ற கிடுகு படத்தின் வசனம் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

இந்த நிலையில், இந்த வசனங்கள் தங்களைப் புண்படுத்திவிட்டதாக திராவிட விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாலர் உமபதி போலீஸில் புகாரளித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்