இதையொட்டி நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் “குடும்பப் படம் எடுப்பது ரொம்ப கஷ்டமானது. ஏனென்றால் கொஞ்சம் பிசகினால் சீரியல் மாதிரி இருக்கு. கிரிஞ்சாக இருக்கு என சொல்லிவிடுவார்கள். அது உண்மைதான். என்னிடம் வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோரும் குடும்பக் கதைதான் கேட்கிறார்கள். கடைகுட்டி சிங்கம் ஓடியதும் சிவகார்த்திகேயன் அது போல ஒரு படம் வேண்டும் என்றார். அப்படிதான் நம்ம வீட்டுப்பிள்ளை உருவானது. தலைவன் தலைவி ஓடினால் அடுத்து வரும் ஹீரோக்கள் அதே போன்ற கதை வேண்டுமென்று கேட்பார்கள்” எனக் கூறியுள்ளார்.