“செல்வராகவன் ஆகச்சிறந்த இயக்குனர்… ஆனால்” ஒளிப்பதிவாளர் நட்டியின் வைரல் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (09:09 IST)
ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு பகாசூரன் என்று அறிவிக்கப்பட்டது.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. மேலும் படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் நட்ராஜ் செல்வராகவனின் நடிப்பை வியந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் “செல்வ ராகவன் ஆக சிறந்த இயக்குனர் மாற்றமில்லை..ஆகச்சிறந்த நடிகராக வியக்கிறேன்..மோகன் ஜீ இயக்குனராக எத்தனை பரிணாமங்களை வாங்கியுள்ளார்.. அவரை வியக்குவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை..என்னப்பனல்லவா, என் தாயும் அல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா…” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்