என்னை விட எஸ் ஜே சூர்யாவுக்கு பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி… நானி பெருமிதம்!

vinoth

திங்கள், 2 செப்டம்பர் 2024 (15:50 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் நேற்று ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியானது. வெளியானது முதல் இந்த படம் வசூல் ரீதியாகக் கலக்கி வருகிறது. படம் 100 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றிப் பேசியுள்ள நானி “என் படத்தில் என்னை விட எஸ் ஜே சூர்யாவுக்கு அதிக பாராட்டுகள் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால் இது எனக்குப் புதிது. இது இந்தப் படத்தில் இருந்து எனக்குக் கிடைத்துள்ள முக்கியமான விஷயம்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்