டூலெட் இயக்குனரின் படத்தில் மிஷ்கின் & ஆர் கே சுரேஷ் !

Webdunia
சனி, 18 மே 2019 (11:58 IST)
டூலெட் படத்தினை அடுத்து செழியன் இயக்கும் அடுத்தப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஆர் கே சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒளிப்பதிவாளர் செழியனின் இயக்கத்தில் உருவான ’டூலெட்’ திரைப்படம், 65வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பில் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஓர் பெருமையை சேர்த்துள்ளது. 

இந்த திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தனது முதல் விருதினை வென்றது. அதையடுத்த ஒரு வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளது. அவற்றில் 80 திரைப்பட விழாக்களில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் 26 திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றும் சாதனைப் படைத்துள்ளது.

அதன் பின்னர் தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றியும் பெற்றது. இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் செழியன். அவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஆர் கே சுரேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்