திரைப்பட நடிகராகவும், சமையற் கலைஞராகவும் அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். ஜாய் கிரிசில்டா என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் ரங்கராஜின் மனைவி ஸ்ருதி தற்போது கணவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார். மகளிர் ஆணையம் மாதம்பட்டி ரங்கராஜை விசாரிக்க அழைத்தபோது அவருடன் சேர்ந்து வந்தார் ஸ்ருதி. இப்போது “என் மீது கரிசனம் காட்டியவர்களுக்கு நன்றி. நானும் என் குழந்தையும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெரியாமல் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் மரியாதையுடன் பதிலளிக்க எனது அறிவு முதிர்ச்சிக் கற்றுக் கொடுத்துள்ளது.