விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்று தமிழ் பேசவில்லை- ராம்சரண்

திங்கள், 27 டிசம்பர் 2021 (22:05 IST)

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இதில் ராம்சரண் “ராம்” என்ற போலீஸ் அதிகாரியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கோமரம் பீம் என்ற கோண்டு இன மக்களின் நாயகனாகவும் நடித்துள்ளார். மேலும் ஆல்யா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர்  இன்று   வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தேவரகொண்டா  முதற்கொண்டு பல நடிகர்களும் இயக்குனர்களும் இப்படத்தின் டிரைலரை பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில், ஆர் .ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய  நிகழ்ச்சி  நந்தம்பாக்கம் வர்த்தகம் மையத்தில்  நடைபெற்று வருகிறது.

இதில் மேடையில் பேசிய இயக்குனர் ராஜமெளலி , தமிழ்த் தாய்க்கு வணக்கம் , சென்னை மாநகருக்கு வணக்கம்… ஆர்.ஆர்.ஆர் படம் இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சியாகவும், இந்திய மண்ணில் இருக்கும் கலாச்சரமாகவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கடுத்து பேசிய இப்படத்தில் நடிகர் ராம்சரண் பேசியதாவது: நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்று தமிழ் பேசவில்லை என்றாலும்  ஓரளவுக்கு நான் தமிழில் பேசியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்