ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (10:10 IST)
ஜோதிகா தன்னுடைய ரி எண்ட்ரிக்கு பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பின் சினிமாவுக்கு குட்பை சொன்ன ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பின் 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். அதையடுத்து வரிசையாக அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அந்த படங்களை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் ஜோதிகாவின் அடுத்த படம் ஒன்றை கண்டநாள் முதல் இயக்குனர் பிரியா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்