யோகி பாபுவை வைத்து படம் இயக்குகிறாரா ஜெயம் ரவி?

vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:38 IST)
யோகி பாபு சமீபத்தில் கதாநாயகனாக நடித்த லக்கிமேன் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த படம் ஜவான் படத்தோடு ரிலீஸ் ஆனதால் வசூலில் பெரியளவில் சோபிக்கவில்லை. இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் பூமர் அங்கிள்’, ‘ஐகோர்ட் மகாராஜா’, ‘வானவன்’, மற்றும் ‘சட்னி சாம்பார்’ ஆகிய திரைப்படங்கள் உருவாக்கத்திலும் ரிலீஸுக்காகவும் காத்திருக்கின்றன.

சமீபத்தில் அவர் ஜெயம் ரவியோடு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘சைரன்’ திரைப்படம் வெளியானது. கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்ததில் இருந்தே ஜெயம் ரவிக்கும் யோகி பாபுவுக்கும் இடையே நல்ல நட்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி, யோகி பாபுவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில் “நான் மூன்று திரைக்கதைகளை உருவாக்கியுள்ளேன். அதில் ஒன்றை யோகி பாபுவை வைத்து இயக்க உள்ளேன். அதற்காக அவருக்கு 500 ரூபாய் முன்பணம் கொடுத்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்