அகிலன் ரிசல்ட்டை முன்பே கணித்தாரா?… குடும்பத்தோடு டூர் சென்ற ஜெயம் ரவி!

திங்கள், 20 மார்ச் 2023 (08:17 IST)
பூலோகம் படத்துக்குப் பிறகு கல்யாண் கிருஷ்ணன் இயக்கிய அகிலன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகவேண்டிய இந்த திரைப்படம் தாமதம் ஆகி வந்த நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ரிலீஸுக்குப் பிறகு அட்டர் ப்ளாப் ஆன இந்த படம் 20 நாட்களில் ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 31 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்கு முன்பே குடும்பத்தோடு ஜெயம் ரவி பின்லாந்து நாட்டுக்கு டூர் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிசல்ட் முன்பே தெரிந்துதான் ஜெயம் ரவி மன அமைதிக்காக சுற்றுலா சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்