கலக்கத்தில் தயாரிப்பார்கள்… ரெய்டில் சிக்கிய மேலும் இருவர்!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:03 IST)
தயாரிப்பாளர் தாணு வீட்டில் நடந்து வரும் வருமாவரித்துறையின் ரெய்டை தொடர்ந்து இன்னும் இரு தயாரிப்பாளர்கள் வீட்டில் ரெய்ட்.  


சினிமா  தயாரிப்பாளரும், பைனான்சியரான அன்பு செழியன் தனது கோபுரம் பிலிம்ஸ் மூலமாக சினிமா படங்கள் பல தயாரித்துள்ளார். பல படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த திடீர் ரெய்டு சம்பவம் திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மேலும் பல சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடக்கலாம் என பேசிக் கொள்ளப்பட்டது. இதற்கு ஏற்ப ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரின் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இது கோலிவுட் தயாப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்