புதிய பேருந்துக்குள் ஒழுகியது மழைநீரா, ஊழலா? - கமல்ஹாசன் டுவீட்

திங்கள், 16 நவம்பர் 2020 (23:21 IST)
திண்டுக்கல்லில் இருந்து அய்யம் பாளையம் செல்லும் பேருந்தில் மேற்கூரை சேதமடைந்திருந்தால், இன்று  பேருந்தினுள் மழை ஒழுகியது. இதனால் பயணிகள் பேருந்தினுள் அமர்ந்து குடை பிடித்தப்படி சென்றனர்.

இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில். புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 

பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான்.
அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம்.
இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.
மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்.

— Kamal Haasan (@ikamalhaasan) November 13, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்