மீண்டும் சிக்கலில் இந்தி விக்ரம் வேதா… வெளியேறும் மற்றொரு ஹீரோ!

வியாழன், 6 மே 2021 (08:52 IST)
இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளாராம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிஃப் அலிகானும் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அமீர்கான் விலகவே அவருக்குப் பதில் ஹ்ருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். அதையடுத்து இப்போது விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லபப்ட்டது. ஆனால் இப்போது ஹ்ரித்திக் ரோஷனும் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம். அவர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களின் நடிப்பதற்கான தேதிகள் ஒதுக்கி விட்டதால் இப்போது இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். 3 வருடங்களுக்கும் மேலாக இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இந்த படத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்