”கோலி சோடா 1.5”… வித்தியாசமான தலைப்போடு வரும் இயக்குனர் விஜய் மில்டன்!

வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:30 IST)
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான கோலி சோடா திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி அந்த படம் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து தற்போது கோலி சோடா 1.5 என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடைபட்ட கதையாக இந்த படம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்