தியேட்டருக்குள் முள்வேலி… ரசிகர்களை கண்ட்ரோல் பண்ண இப்படி ஒரு முடிவா?

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:48 IST)
நாளை மறுநாள் உலகம் முழுவதும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலிஸாக உள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் நடித்துள்ள நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்ற கவலை திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் எழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் ஸ்ரீகா குளத்தில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் ஆர்வமிகுதியில் திரை இருக்கும் பக்கம் சென்று ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்க, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்