ஓடிடியில் வெளியாகிறதா தனுஷின் அடுத்த திரைப்படம்?

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:34 IST)
தனுஷ் மற்றும் அக்‌ஷய்குமார் நடித்துள்ள அத்ராங்கி டே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இந்த படத்தில்  தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் நடித்துள்ளனர். இந்த படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஓடிடியில் வெளியிட பரிசீலித்து வருவதாக அக்‌ஷய்குமார் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்