உலக அரங்கில் மீண்டுமொறு தனுஷ் படம்! – மாரி செல்வராஜ் ட்வீட்!

செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:39 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் ஜெர்மனியில் நடைபெறும் திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் கர்ணன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவே திரையரங்கில் வெளியாகி விமர்சம் மற்றும் நல்ல வசூலை பெற்ற இப்படம் சில வாரங்களில் ஓடிடியிலும் வெளியானது.

தற்போது கர்ணன் திரைப்படம் ஜெர்மனியில் ஃபார்ங்பர்ட் நகரில் நடைபெறும் புதிய தலைமுறை இந்திய படங்களுக்கான திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்