‘ஆண்பாவம்’ புகழ் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

vinoth

சனி, 14 ஜூன் 2025 (11:00 IST)
நாட்டுப்புற பாடல் கலைஞரும் தமிழ் திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 99. கடந்த சில ஆண்டுகளாக அவர் பார்த்துக்கொள்ள உறவினர்கள் இல்லாமல் தனிமையில் அவதிப்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது மறைவு செய்தி சமூகவலைதளங்கள் வாயிலாக பரவி வரும் நிலையில் திரை ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாட்டுப்புற பாடகியான இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி நடத்துனராக தனது கலைவாழ்க்கையைத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இசைத்துறையில் அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தின் மூலமாக இவர் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.  அதில் பாண்டியராஜனுடன் இணைந்து நடித்த கோபாலா கோபாலா மற்றும் ஆயுசு நூறு ஆகிய படங்கள் குறிப்பிடத்தகுந்தன. தமிழ் சினிமாவில் இவர் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்