தனுஷ் அருண் மாதேஸ்வரன் இணையும் சாணிக்காயிதம்… தொடங்குவதில் தாமதம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (16:01 IST)
ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து தனுஷ் ஒரு படம் நடிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுத் திரைப்படம் என்பதால் இன்னும் திரைக்கதை உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகள் முடியாததால் மேலும் சில மாதங்கள் கழித்துதான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்