டிமாண்டி காலணி இரண்டாம் பாகத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

திங்கள், 26 டிசம்பர் 2022 (15:42 IST)
தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிமாண்ட் உச்சத்தில் இருந்தபோது வெளியாகி கவனத்தை ஈர்த்த படம் தான் டிமாண்ட்டி காலணி. இந்த படத்தில் அருள்நிதி, சனத் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்த நிலையில் அறிமுக இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கி இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டுக்குள்ளாகவே படமாக்கி முடிக்கப்பட்டு வெளியான இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது.

இதையடுத்து இப்போது அதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகத்தை எழுதி, தயாரிக்க உள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு அஜய் ஞானமுத்து திரைக்கதை மட்டுமே எழுத உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அவரின் உதவியாளர் ஒருவர் இந்த படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கோப்ரா படத்தின் தோல்வியால், அஜய் ஞானமுத்துவே இந்த படத்தை இயக்கும் முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோப்ரா படத்துக்குப் பிறகு அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வராததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்