கவிஞர் பிறைசூடன் மறைவு: வைரமுத்து இரங்கல்

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (18:47 IST)
தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி பாடலாசிரியரும் , கவிஞருமான திகழ்ந்த பிறைசூடன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்த்திரைப்பட பாடலாசியர்கள் சங்கம் மற்றும் திரைத்துறையினர் கவிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கவிஞர் பிறைசூடன், நடந்தால் இரண்டி, இதயமே இதயமே, ஒரு காதல் கவிதைகள் படித்திடும் நேரம், ரசிகா ரசிகா உள்ளிட்ட 1500 பாடல்களை 400 படங்களில் எழுதியுள்ளார். 

இந்நிலையில், கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு கவிப்பேரரசர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிறைசூடன் என்ற அழகிய பெயருடையான் போயுற்றான் நல்ல மனிதனாய் நல்ல கலைஞனாய் அறியப்பட்டோன் ஆவிதுறந்தான் சிந்தனையாளன் செயற்பாட்டாளன் சக கவிஞர்களைக் கொண்டாடும் கொள்கையாளன் சென்றுவிட்டான் தமிழோடு வாழ்வான்; அகமே அமைதியுறுக! எனத் தெரிவித்துள்ளார்.

பிறைசூடன் என்ற
அழகிய பெயருடையான்
போயுற்றான்

நல்ல மனிதனாய்
நல்ல கலைஞனாய்
அறியப்பட்டோன்
ஆவிதுறந்தான்

சிந்தனையாளன்
செயற்பாட்டாளன்
சக கவிஞர்களைக்
கொண்டாடும் கொள்கையாளன்
சென்றுவிட்டான்

தமிழோடு வாழ்வான்;
அகமே அமைதியுறுக! pic.twitter.com/mb0GFXHCUd

— வைரமுத்து (@Vairamuthu) October 8, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்